தாய்ப்பாலின் ஊடே
விதையாய் விழுந்து,
சகோதர பாசப்பொழிவினால்
செடியாக முளைத்து,
உற்ற தோழமையின்
வேலியினால் பாதுகாப்பாய்
வளர்ந்து,
பருவமதில் பூத்துக்குலுங்கிடுமே
காதலெனும் பெயரினிலே ! அது
திருமண மோகனத்தில்
காய்த்துப் பின்
பிள்ளையினிடத்தில் பழமாக
படைக்குந் தன்னில்,
அடுத்த சுழற்சிக்கு
வித்தாக மாறுமே
அன்பெனும் மரமே !!!
No comments:
Post a Comment