Saturday, December 19, 2009

அன்பு சுழற்சி

தாய்ப்பாலின் ஊடே
விதையாய் விழுந்து,

சகோதர பாசப்பொழிவினால்
செடியாக முளைத்து,

உற்ற தோழமையின்
வேலியினால் பாதுகாப்பாய்
வளர்ந்து,

பருவமதில் பூத்துக்குலுங்கிடுமே
காதலெனும் பெயரினிலே ! அது

திருமண மோகனத்தில்
காய்த்துப் பின்

பிள்ளையினிடத்தில் பழமாக
படைக்குந் தன்னில்,

அடுத்த சுழற்சிக்கு
வித்தாக மாறுமே

அன்பெனும் மரமே !!!

No comments:

Post a Comment