சில கேள்விகள்
குமாருக்கு காலையிலிருந்தே வயிறு சரியில்லை. முந்நாள் இரவு இரண்டாம் தரமான கையேந்தி பவனில் சிக்கன் சாப்பிட்டதால் வந்த வினை என்று மறுநாள் காலை தெரிந்து கொண்டான். அலுவலகக் கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்தான். காலையிலிருந்தே வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்ததினால் உடல் தளர்ந்து இருந்தது. அதற்கு மேலும் தன்னால் வேலை செய்ய முடியாது என்று முடிவு செய்து, மேலாளரிடம் சொல்லிவிட்டு, தான் நண்பனுடன் தங்கி இருக்கும் பேச்சுலர் வீட்டிற்குச் சென்றான். இப்போது வயிற்றுப்போக்குடன், வாயில் குமட்டிக் கொண்டும் வந்து கொண்டிருந்தது. அவனது குடலே வெளியேருவது போலிருந்தது அவனுக்கு. உடல் மிகவும் தளர்ந்து தள்ளாட்டம் மிகுந்தது. செல்ஃபோனைத் தட்டி தன் அறை நண்பனை அழைத்தான்.
“டேய் ஆண்டனி எங்கடா இருக்க?”, குமார்
“கஸ்டமர் சைட் ல இருக்கேன் டா, இங்க ஒரு ப்ராப்ளம், அதுக்கு என்ன கூப்டாங்க”, ஆண்டனி.
“டேய், காலைலயே எனக்கு நிறைய போய்ட்டு இருந்ததுனு தெரியும் ல, இப்ப இன்னும் அதிகமா போய்ட்டே இருக்குடா, என்னால ஒன்னும் செய்ய முடியல, ரூம்க்கு வந்துட்டேன். நீ வர முடியுமா?”, சிறிது பதற்றத்துடன் குமார்.
“என்னடா சொல்ற?,எதுக்கும் லெமன் ஜூஸ் போட்டுக் குடிடா. கொஞ்சம் தெம்பா இருக்கும். எப்டியாவது கேட்டுட்டு வந்துடரேன்”, ஆண்டனி.
நண்பனின் இந்த வார்த்தையைக் கேட்டதும், குமாருக்கு இதமாக இருந்தது. நண்பன் சொல்படி, மிகவும் சிரமப்பட்டு எலுமிச்சை ஜூஸ் போட்டுக் குடித்தான். எது குடித்தாலும் சிறிது நேரத்திற்கெல்லாம் வெளியே வந்து விடுகிறது. ஏதாவது ஜூஸ் அல்லது நீர் ஆகாரம் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான். பின்னர் நண்பன் வந்ததும் மருத்துவரை சந்திக்கலாம் என்று தீர்மானித்தான்.
ஆண்டனியின் மோட்டார் சைக்கிள் சத்தத்தைக் கேட்டதும் குமாருக்கு உயிர் வந்தது போலிருந்தது. உடனே அருகிலிருக்கும் ஒரு கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றான். 10 முடிந்து 11ஆவது டோக்கனில் மருத்துவரைச் சந்திக்க நேர்ந்தது. விவரங்களைக் கேட்டறிந்து, சாதாரண வயிற்றுப்போக்கிற்கு மருந்துகளை எழுதித் தந்தார்.
மருத்துவரைச் சந்தித்தபிறகும் குமாருக்கு குணமாகவில்லை. படுத்த படுக்கையாகிப் போனான். ஆண்டனிக்கு பயம் ஏற்பட்டது. உடனே குமாரின் பெற்றோருக்குத் தெரியப் படுத்தினான்.
”அய்யோ என்னாச்சுங்க புள்ளைக்கு?” குமாரின் தாய்.
“பையனுக்கு வாந்தி பேதியாம், டாக்டர் கிட்ட காட்டியும் குணமாகலயாம், ஆண்டனி சொன்னான்” குமாரின் தந்தை.
“உடனே போய் பாத்துடலாம், இப்ப கிளம்பினா ராவுக்கெல்லாம் போய் சேந்துடலாம்”, குமாரின் அம்மா பதைபதைப்புடன்.
தன் ஒரே பையனைக் காண, குமாரின் தாய், தந்தை உடனே புறப்பட்டனர்.
இரவு அவர்கள் வந்ததும், உடனே அதே மருத்துவரிடம் காண்பித்தனர். அவர் இதைப் பார்த்து, இது காலராவாக இருக்கக் கூடும், உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று கூறி, தனக்கு பங்கு இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு சிபாரிசு செய்தார்.
அதீத வயிற்றுப்போக்கால், அவனுடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, ஜுரம் வர ஆரம்பித்திருந்தது.
”டேய், ஏண்டா அப்பா அம்மா கிட்டலாம் சொன்னே?” ஒரே நய் நய்னு இருக்கப்போராங்க என்று சொல்லி முடிப்பதற்குள் அவன் நினைவு தப்பியது.
”அய்யோ குழந்த பொழப்பானா? பயமா இருக்கே”, குமாரின் தாய்.
“கொஞ்சம் பொருமையா இரு, நான் பாத்துக்கரேன்”, குமாரின் தந்தை.
”ஆண்டி எனக்கு வேலை இருக்கு, குமார பாத்துக்கோங்க”, ஆண்டனி.
“சரிடா, நீ வேலைக்கு போடா, ரொம்ப தேங்க்ஸ்டா, உன்னை எவ்ளோவோ திட்டியிருக்கேன், மன்னிச்சுக்கோடா”, குமாரின் அம்மா.
“பரவால ஆண்ட்டி”, ஆண்டனி.
மருத்துவமனை செல்லும் வழியில், குமாருக்கு சுயநினைவு வந்தது.
“ஏன் மா, நாம எங்க போறோம்? எனக்கு ஒன்னும் இல்லம்மா. லேசா ஜுரம்” இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போது மறுபடியும் நினைவு தப்பியது.
நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்தது அம்மருத்துவமனை. மருத்துவரின் சிபாரிசு கடிதத்தைக் காட்டியதும் உடனே அனுமதிக்கப்பட்டான். குமாரின் அறைக்கு, ஒரு இளவயது நர்ஸ் ஓடி வந்து சுயநினைவின்றி கிடக்கும் அவனின் ரத்தக்குழாயை நிரடி ஊசியால் குத்தி குளுக்கோஸ் ஏற்றினாள். சுயநினைவு இல்லையென்றாலும், தான் இறந்துவிடுவோமோ என்ற பயமே அவனது ஜுரத்தை அதிகப் படுத்தியது. போதாக் குறைக்கு அவனின் அம்மா அழுது புலம்பிக் கொண்டே இருந்தது அவனது பயத்தை அதிகமாக்கியது.
குமார் அனுமதிக்கப் பட்டிருந்த அறைக்கு மருத்துவர்கள் புடை சூழ வந்த வண்ணம் இருந்தார்கள். ஆறு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றியபின், நள்ளிரவில் குமாருக்கு சுயநினைவு திரும்பியிருந்தது.
அவனின் அம்மா, கண்ணீர் மல்க, “குமாரு, எப்டிடா இருக்கு?” என்று அழாத குறையாக கேட்டாள்.
உடனே நர்ஸ், “பேஷண்ட் கண் முழிச்சுட்டாங்க, இருங்க முதல்ல இந்த மாத்திரைய சாப்பிட சொல்லுங்க” என்று கூறி வித விதமான வண்ணங்களில் மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.
இரண்டு நாட்களில் குமார் முழுகுணம் அடைந்தான். அம்மா அழுது கொண்டிருக்கும் போது, வேளைக்கு மாத்திரை, சாப்பாடு மற்றும் தைரியத்தைக் கொடுத்து தனக்கு உதவி செய்த நர்ஸை மருத்துவமனையை விட்டுக் கிளம்பும் முன் நன்றியோடு பார்த்தான்.
“குமார், இனி ரோட் சைட் ல இருக்கர அசுத்தமான கையேந்தி பவன் லாம் சாப்பிடாத, என்ன? பாரு எல்லாருக்கும் கஷ்டமா போச்சு, உனக்கு இனி எதுவும் இல்லை. பயப்படாத, நீ வீட்டுக்கு போலாம்” என்றாள் அந்த நர்ஸ்.
அதே நேரத்தில் குமாரின் பெற்றோர்கள்,
“அந்த ஆண்டனி கிரிஸ்டீன், அவன் கூட உன் பையன சேரக் கூடாதுனு சொன்னியே, இப்ப என்ன ஆச்சு? அவன் இல்லைனா நம்ம பையன் கதி அவ்ளோ தான்” குமாரின் தந்தை.
“அவன் விதி இப்டி அவனை ஆக்கிடுச்சு” குமாரின் அம்மா.
“இதுக்கும் விதிக்கும் என்னடி சம்மந்தம்? கை நிறைய சம்பாதிச்சாலும் அசுத்தமான கையேந்தி பவன்ல சாப்டது அவனோட கொழுப்பு, அதனால காலராவ வாங்கிக்கினான்”, குமாரின் அப்பா.
“எவ்ளோவோ சொன்னேன். அவன் கேக்கவே இல்லை. இல்லைனா அவன நம்ப ஊர்லேயே ஒரு கடைய வச்சு குடுத்திருந்தா இப்டிலாம் நடந்திருக்குமா?” குமாரின் அம்மா.
”என் விதி இப்டிலாம் நான் கேக்கவேண்டியிருக்கே”, புலம்பலுடன், குமாரின் தந்தை.
----------------------------------------------------------------------------
இப்போது கேள்விக்கு வருவோம்.
விதி என்றால் என்ன?
விதியை மதியால் வெல்லலாமா?
விதி வலியதா?
விதியை நிர்ணயிப்பது யார்?
தமிழ் இலக்கியங்களிலும் விதியைப் பற்றி கூற்று இருக்கிறது. சிலப்பதிகாரத்திலும், கோவலனின் நிலைமைக்குக் காரணம் அவனுடைய ஊழ்வினையே என்று கூறுகிறார் இளங்கோவடிகள். திருக்குறளும் விதி, ஊழ் என்ற ஒன்று இருக்கிறது என்பதை நம்புகிறது. ஆனால் ஊழையும் உப்பக்கம் காணலாம் என்று கூறுகிறது.
உண்மையிலேயே ஊழ் அல்லது விதி என்ற ஒன்று இருக்கிறதா? அல்லது இதுவும் மக்களின் இயலாமையினால் தங்களுக்கு தாங்களே ஆறுதல் சொல்லுவதற்காக ஏற்படுத்திக் கொண்டதா?
இயற்கையின் படி நடக்கும் எதுவும் விதி என்று ஒருவாறு கூறலாம். ஆனால் மனிதன் இயற்கையை ஓரளவுக்கு வென்று தான் உல்லாசமாக வாழக் கற்றுக் கொண்டான். மனிதனின் மதியையும் மீறி நடக்கும் எதையும் விதி என்று பொதுமைப் படுத்தி விடுகிறோம். ஆனால் இந்த விதியானது நம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களினால் என்று தீர்மானிக்கப் படுகிறது என்ற ஒரு நம்பிக்கை தான் சிறிது சிந்திக்க வைக்கிறது.
மக்களின் இயலாமையினால்(மதியால் முடியாதது) தாங்களாகவே ஏற்படுத்தியதுதான் விதி என்றால், அதிலும் இரண்டு வகையினர் உள்ளனர். இயற்கையை மீறி எதுவும் செய்ய முடியாது என்று இயற்கையுடன் போராடி பின்னர் இது விதி என்று தேற்றிக்கொள்வர் ஒரு வகையினர். எந்த ஒரு முயற்சியும் இல்லாமல், நமக்கு கிடைக்கவில்லை என்று விதியின் மேல் பழியைச் சொல்லி சோம்பேறிகளாகவே இருப்பவர்கள் இன்னொரு வகையினர்.
நீங்கள் எந்த வகையினர்?
பின்குறிப்பு: சிலர் என்னிடம், நீங்கள் கேள்விகள் மட்டுமே கேட்டுக் கொண்டிருகிறீர்கள், பதிலைக் காணோமே என்று கேட்கின்றனர். அதற்காகத்தான் தலைப்பு “சில கேள்விகள்”.
மேலும் சிலர், இதெல்லாம் பதிலில்லாக் கேள்விகள் என்று கூறுகின்றனர். இந்த கேள்விகள் அனைத்தும் சுயசிந்தனைக்காக மட்டுமே. பதில்கள் அவரவர் அனுபவத்திற்கேற்றார்போல் அமைத்துக் கொள்ளலாம்.
ஒரு நண்பர், இந்த கேள்விகள் கேட்டு ஏன் சிலரின் நம்பிக்கையை குலைக்கிறாய் என்று கேட்கிறார். நம்பிக்கை வேறு, மூட நம்பிக்கை வேறு. நாமெல்லாம் சுயமாக சிந்திக்கத் தெரிந்தவர்கள்தானே?
Wednesday, July 20, 2011
Tuesday, March 15, 2011
சில கேள்விகள் - 3
சில கேள்விகள் - 3
முந்தைய பதிவுகளுக்கு இங்கே சொடுக்கவும்
சில கேள்விகள்
சில கேள்விகள் - 2
சோதிடம், ஆரூடம், சாதகம், பொருத்தம், ராசிபலன், சகுனம், வாஸ்த்து, கைரேகை பலன். மேற்கூறிய அனைத்து வார்த்தைகளையும் (இன்னும் சிலவற்றை நான் விட்டிருக்காலாம்) தினமும் கேட்காமல் இருக்க முடியாது. சோதிடத்தை நம்பலாமா? வேண்டாமா? என்று என்னுள் எழுந்த கேள்விகளையும் சிந்தனைகளையும் (குழப்பங்கள்) இப்பதிவில் கொணர முயற்ச்சித்துள்ளேன்.
இவற்றிற்கெல்லாம் மூல காரணமாக இருப்பது Astronomy என்று சொல்லப்படும் விண்வெளி ஆரய்ச்சி. விண்வெளி ஆராய்ச்சி வளர்ந்து வந்த அதே நேரத்தில் Astrology என்று சொல்லப்படும் வான சாஸ்த்திரமும் வளர்ந்து வந்தது. இவை இரண்டும் ஒரே நேரத்தில் சுமார் 5000 வருடங்களுக்கு முன் உருவாகியிருக்க வேண்டும் என்று Google ஆண்டவரின் மூலமாக தெரிந்துகொண்டேன்.
விண்வெளிக்கும் தனிமனிதனுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருப்பது வான சாஸ்திரத் துறை. இது எப்படி சாத்தியமாகும்? இன்னொரு கேள்வியும் எழலாம், அது எப்படி பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பாலிருக்கும் ஒரு கிரகம் பூமியிலிருக்கும் ஒரு மனிதனின் செயல்களைக் கட்டுப்படுத்துகிறது? அதற்கான வான சாஸ்த்திரம் கூறும் சாத்தியக்கூறுகளை இங்கே குறிப்பிடுகிறேன்.
ஒவ்வொரு மனிதனின் மனநிலையும் ஒவ்வொரு நாளும் வேறு வேறாக இருக்கிறது. புறக்காரணிகளைத் தவிர்த்துவிட்டு பார்க்கும் போது, இன்னும் வேறு ஏதோ சில காரணிகள் மனிதனின் செயல்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட காரணிகளை ஆரயும்போது முக்கியமாக கிடைப்பது கதிர்வீச்சு. கதிர்வீச்சுக்கள் மனித மூளையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் வினையூக்கிகளாக (catalyst) செயல்படுகின்றன. அவை முறையே புறஊதாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள், மின்காந்தக் கதிர்கள், மைக்ரோ வேவ்ஸ், இன்னும் சில. இத்தகைய கதிர்வீச்சுக்கள் இப்புவியிலிருந்து மட்டுமல்லாமல் வேறு கிரகங்கள், நட்சத்திரங்களிலிருந்தும் வந்திருக்கலாம். விண்வெளி ஆரய்ச்சியின் இத்தகைய கண்டுபிடிப்புகளை வான சாஸ்த்திரம் உபயோகப் படுத்திக் கொண்டு, இத்தகைய கதிர்வீச்சுக்களால் ஏற்படும் மாற்றங்களை நெடுநாட்களாக ஆரய்ந்து (continuous observation), இதை பதிவு செய்தனர். உதாரணமாக, வியாழன் கிரகத்திலிருந்து வரும் சில கதிர்வீச்சுகளால் ஒரு குறிப்பிட்ட தினத்தில் பிறந்தவருக்கு ஏற்பட்ட மாற்றங்களை பன்னெடுங்காலமாக ஆராய்ந்து பதிவு செய்தனர். இந்தப் பதிவுகள், பின்னாளில் அதே தினத்தில் பிறந்தவருக்கு கூறப்பட்டது.
சூரியக் கதிர்வீச்சினால் பாதிப்புக்குள்ளாகும் போது, பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் இருக்கும் கிரங்களிலிருந்து வரும் கதிர்வீச்சு பூமியிலிருக்கும் மனிதனை பாதிக்கும் என்ற நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது.
எனவே வான சாஸ்திரம் அல்லது சோதிடம் கூறும் செய்திகள் ஒருவித கணிப்பு என்பது தெளிவாகிறது.
தினபலன், வாரபலன், ராசிபலன் மற்றும் ஆண்டுப்பலன் கூறாத பத்ரிக்கைகளோ, தொலைக்காட்சியோ இல்லை என்றே கூறலாம். எனக்கு இதெல்லாம் என்னவென்றே தெரியாத நாட்களும் இருந்தன. என் ராசி என்னவென்றே தெரியாமல் இருந்தேன்.
“அம்மா, என் ராசி என்னம்மா?”, ஒருநாள் தினசரியைக் கையில் விரித்தபடி.
“டேய் உன்னோடது மகர ராசினு அப்பா சொன்னார்”, அடுக்களையில் வேலை செய்தபடி.
அன்றிலிருந்து வெகுநாட்களாக மகர ராசிக்கு என்னமோ அதையே படித்தும், கேட்டுக்கொண்டிருந்தும் இருந்தேன். பெரும்பாலான நாட்கள், அந்த தினசரியில் போடப்பட்டிருப்பது சரியாகவே இருக்கும். அப்பொழுது மாணவனாக இருந்தபடியால், மாணவர்களுக்கு என்ற வார்தையை நன்றாகத் தேடி, என்ன எழுதியிருக்கிறார்கள் என்று படிக்கும் ஒரு தனி ஆவல் இருந்தது. ராசியான நிறம், ராசியான நாள் என்றெல்லாம் அதில் குறிப்பிட்டுள்ளதைபோன்று செயல்படுவேன்.
ஒரு நாள் ராசிபலன், நட்சத்திரப் பலன் என்றானது. அதில் நட்சத்திரம் முக்கியமாகக் குறிப்பிட்டிருந்தது. உடனே அம்மாவிடம்,
“என் நட்சத்திரம் என்ன?” என்று கேட்டேன்.
“அதான் அன்னிக்கே சொன்னேனே டா, மகரம்னு”, என்றாள் அம்மா.
“மகரம்கிரது ராசி மா”, என்றேன்.
“உங்க அப்பா உன்னோட ஜாதகம் வச்சிருகாரு, அவரு வந்ததும் கேளு”, என்றாள்.
வேலை முடித்து வந்த அவரிடம், “என் நட்சத்திரம் என்னபா? இந்த வார ராசிபலன்ல என்ன போட்டிருக்குனு பாக்கனும்”, என்று கேட்டேன்.
“திருவாதிரையோ, திருவோணமோ? இரு பாத்து சொல்றேன்” என்றார்.
உடனே அந்த தினசரியில், திருவோண நட்சத்திரத்தைப் பார்க்கும் போது, ”அன்பான மகர ராசி நேயர்களே” என்றிருந்தது. சிறிது நேரம் கழித்து
“உன்னோடது திருவாதிரைனு போட்டிருக்கு டா” என்றார்.
அந்த நட்சத்திரத்திற்கு, மிதுன ராசி என்றிருந்தது. எனக்கு தூக்கிவாரிப் போட்டது. மிதுன ராசிக்காரனான நான் இவ்வளவு தினம் மகர ராசி பலனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்றிலிருந்து குழம்பிப் போய் மகர, மிதுன ராசி பலன்களைப் படிக்க ஆரம்பித்தேன். சில நாள் கழித்து எல்லா பலன்களையும் படிக்க ஆரம்பித்தேன். இப்பொழுது முழுதும் குழம்பிப் போய் ராசி பலன் பார்ப்பதையே விட்டுவிட்டேன்.
ஒருவரின் பிறந்த நேரத்தை வைத்து இவர் இன்ன நட்சத்திரத்தில் இன்ன லக்கினத்தில் இந்த ராசியில் பிறந்தார் என்று கணிக்கிறார்கள். அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறக்கும் நேரத்தை மருத்துவர்கள் நிர்ணயிக்கிறார்கள். அப்போது, பிறக்கும் குழந்தைகளுக்கு கணிக்கப் படும் ஜாதகம் சரியாக இருக்குமா? ஒரு சிலரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்று, குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்து விடுகின்றனர். இது எத்தகைய முட்டாள்தனம்?
இப்படியிருக்க அந்த குழந்தை உருவான நாளைத்தானே நாம் கணிக்க வேண்டும். அது எந்த விதத்தில் சாத்தியம்?
கேள்விகள் தொடரும் . . .
முந்தைய பதிவுகளுக்கு இங்கே சொடுக்கவும்
சில கேள்விகள்
சில கேள்விகள் - 2
சோதிடம், ஆரூடம், சாதகம், பொருத்தம், ராசிபலன், சகுனம், வாஸ்த்து, கைரேகை பலன். மேற்கூறிய அனைத்து வார்த்தைகளையும் (இன்னும் சிலவற்றை நான் விட்டிருக்காலாம்) தினமும் கேட்காமல் இருக்க முடியாது. சோதிடத்தை நம்பலாமா? வேண்டாமா? என்று என்னுள் எழுந்த கேள்விகளையும் சிந்தனைகளையும் (குழப்பங்கள்) இப்பதிவில் கொணர முயற்ச்சித்துள்ளேன்.
இவற்றிற்கெல்லாம் மூல காரணமாக இருப்பது Astronomy என்று சொல்லப்படும் விண்வெளி ஆரய்ச்சி. விண்வெளி ஆராய்ச்சி வளர்ந்து வந்த அதே நேரத்தில் Astrology என்று சொல்லப்படும் வான சாஸ்த்திரமும் வளர்ந்து வந்தது. இவை இரண்டும் ஒரே நேரத்தில் சுமார் 5000 வருடங்களுக்கு முன் உருவாகியிருக்க வேண்டும் என்று Google ஆண்டவரின் மூலமாக தெரிந்துகொண்டேன்.
விண்வெளிக்கும் தனிமனிதனுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருப்பது வான சாஸ்திரத் துறை. இது எப்படி சாத்தியமாகும்? இன்னொரு கேள்வியும் எழலாம், அது எப்படி பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பாலிருக்கும் ஒரு கிரகம் பூமியிலிருக்கும் ஒரு மனிதனின் செயல்களைக் கட்டுப்படுத்துகிறது? அதற்கான வான சாஸ்த்திரம் கூறும் சாத்தியக்கூறுகளை இங்கே குறிப்பிடுகிறேன்.
ஒவ்வொரு மனிதனின் மனநிலையும் ஒவ்வொரு நாளும் வேறு வேறாக இருக்கிறது. புறக்காரணிகளைத் தவிர்த்துவிட்டு பார்க்கும் போது, இன்னும் வேறு ஏதோ சில காரணிகள் மனிதனின் செயல்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட காரணிகளை ஆரயும்போது முக்கியமாக கிடைப்பது கதிர்வீச்சு. கதிர்வீச்சுக்கள் மனித மூளையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் வினையூக்கிகளாக (catalyst) செயல்படுகின்றன. அவை முறையே புறஊதாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள், மின்காந்தக் கதிர்கள், மைக்ரோ வேவ்ஸ், இன்னும் சில. இத்தகைய கதிர்வீச்சுக்கள் இப்புவியிலிருந்து மட்டுமல்லாமல் வேறு கிரகங்கள், நட்சத்திரங்களிலிருந்தும் வந்திருக்கலாம். விண்வெளி ஆரய்ச்சியின் இத்தகைய கண்டுபிடிப்புகளை வான சாஸ்த்திரம் உபயோகப் படுத்திக் கொண்டு, இத்தகைய கதிர்வீச்சுக்களால் ஏற்படும் மாற்றங்களை நெடுநாட்களாக ஆரய்ந்து (continuous observation), இதை பதிவு செய்தனர். உதாரணமாக, வியாழன் கிரகத்திலிருந்து வரும் சில கதிர்வீச்சுகளால் ஒரு குறிப்பிட்ட தினத்தில் பிறந்தவருக்கு ஏற்பட்ட மாற்றங்களை பன்னெடுங்காலமாக ஆராய்ந்து பதிவு செய்தனர். இந்தப் பதிவுகள், பின்னாளில் அதே தினத்தில் பிறந்தவருக்கு கூறப்பட்டது.
சூரியக் கதிர்வீச்சினால் பாதிப்புக்குள்ளாகும் போது, பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் இருக்கும் கிரங்களிலிருந்து வரும் கதிர்வீச்சு பூமியிலிருக்கும் மனிதனை பாதிக்கும் என்ற நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது.
எனவே வான சாஸ்திரம் அல்லது சோதிடம் கூறும் செய்திகள் ஒருவித கணிப்பு என்பது தெளிவாகிறது.
தினபலன், வாரபலன், ராசிபலன் மற்றும் ஆண்டுப்பலன் கூறாத பத்ரிக்கைகளோ, தொலைக்காட்சியோ இல்லை என்றே கூறலாம். எனக்கு இதெல்லாம் என்னவென்றே தெரியாத நாட்களும் இருந்தன. என் ராசி என்னவென்றே தெரியாமல் இருந்தேன்.
“அம்மா, என் ராசி என்னம்மா?”, ஒருநாள் தினசரியைக் கையில் விரித்தபடி.
“டேய் உன்னோடது மகர ராசினு அப்பா சொன்னார்”, அடுக்களையில் வேலை செய்தபடி.
அன்றிலிருந்து வெகுநாட்களாக மகர ராசிக்கு என்னமோ அதையே படித்தும், கேட்டுக்கொண்டிருந்தும் இருந்தேன். பெரும்பாலான நாட்கள், அந்த தினசரியில் போடப்பட்டிருப்பது சரியாகவே இருக்கும். அப்பொழுது மாணவனாக இருந்தபடியால், மாணவர்களுக்கு என்ற வார்தையை நன்றாகத் தேடி, என்ன எழுதியிருக்கிறார்கள் என்று படிக்கும் ஒரு தனி ஆவல் இருந்தது. ராசியான நிறம், ராசியான நாள் என்றெல்லாம் அதில் குறிப்பிட்டுள்ளதைபோன்று செயல்படுவேன்.
ஒரு நாள் ராசிபலன், நட்சத்திரப் பலன் என்றானது. அதில் நட்சத்திரம் முக்கியமாகக் குறிப்பிட்டிருந்தது. உடனே அம்மாவிடம்,
“என் நட்சத்திரம் என்ன?” என்று கேட்டேன்.
“அதான் அன்னிக்கே சொன்னேனே டா, மகரம்னு”, என்றாள் அம்மா.
“மகரம்கிரது ராசி மா”, என்றேன்.
“உங்க அப்பா உன்னோட ஜாதகம் வச்சிருகாரு, அவரு வந்ததும் கேளு”, என்றாள்.
வேலை முடித்து வந்த அவரிடம், “என் நட்சத்திரம் என்னபா? இந்த வார ராசிபலன்ல என்ன போட்டிருக்குனு பாக்கனும்”, என்று கேட்டேன்.
“திருவாதிரையோ, திருவோணமோ? இரு பாத்து சொல்றேன்” என்றார்.
உடனே அந்த தினசரியில், திருவோண நட்சத்திரத்தைப் பார்க்கும் போது, ”அன்பான மகர ராசி நேயர்களே” என்றிருந்தது. சிறிது நேரம் கழித்து
“உன்னோடது திருவாதிரைனு போட்டிருக்கு டா” என்றார்.
அந்த நட்சத்திரத்திற்கு, மிதுன ராசி என்றிருந்தது. எனக்கு தூக்கிவாரிப் போட்டது. மிதுன ராசிக்காரனான நான் இவ்வளவு தினம் மகர ராசி பலனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்றிலிருந்து குழம்பிப் போய் மகர, மிதுன ராசி பலன்களைப் படிக்க ஆரம்பித்தேன். சில நாள் கழித்து எல்லா பலன்களையும் படிக்க ஆரம்பித்தேன். இப்பொழுது முழுதும் குழம்பிப் போய் ராசி பலன் பார்ப்பதையே விட்டுவிட்டேன்.
ஒருவரின் பிறந்த நேரத்தை வைத்து இவர் இன்ன நட்சத்திரத்தில் இன்ன லக்கினத்தில் இந்த ராசியில் பிறந்தார் என்று கணிக்கிறார்கள். அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறக்கும் நேரத்தை மருத்துவர்கள் நிர்ணயிக்கிறார்கள். அப்போது, பிறக்கும் குழந்தைகளுக்கு கணிக்கப் படும் ஜாதகம் சரியாக இருக்குமா? ஒரு சிலரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்று, குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்து விடுகின்றனர். இது எத்தகைய முட்டாள்தனம்?
இப்படியிருக்க அந்த குழந்தை உருவான நாளைத்தானே நாம் கணிக்க வேண்டும். அது எந்த விதத்தில் சாத்தியம்?
கேள்விகள் தொடரும் . . .
Saturday, January 22, 2011
சில கேள்விகள் - 2
சில கேள்விகள். முதல் பதிவிற்கு இங்கே சுட்டவும்
அது ஒரு அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப் பாதை. அவன் அவ்வழியே தினமும் தன் இரு சக்கர வாகனத்தில் அடுத்த ஊருக்கு சென்று தன் மளிகை கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவது வழக்கம். என்றும் தன் வண்டியை மெதுவாக ஓட்டிச்சென்று தான் வருவான். இன்று அவன் மனதிற்கு என்ன தோன்றியதோ, புறப்பட்ட சில நிமிடங்களில் வண்டியின் வேகத்தைக் கூட்டிக் கொண்டே சென்றான். வழியில் எது வந்தாலும் வேகத்தைக் குறைக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, எதிரே ஒரு சிறிய திருப்பம் வந்தது, ஒரு பேருந்து வரும் சத்தமும் வந்தது. பேருந்து வருவது தெரிந்திருந்தும் வேகத்தைக் குறைக்காமல் சாலையின் இடது புறமாகவே செல்லலாம் என்று நினைத்துத் திரும்பும் போது இடது பாதையில் சில எருமைகள் சாலையைக் கடக்க முற்பட்டன. சாலையின் இடது புறம் எருமைகளும் வலது புறம் பேருந்தும் தெரிந்தன. சாலையின் இருமருங்கிலும் அடர்ந்த வனம். அந்த ஒரு நொடியில் அவனுக்கு அந்த எருமைகளின் மீது எமன் அமர்ந்திருக்கிறானோ என்றே எண்ணத்தோன்றியது. என்ன செய்வதென்று தெரியாமல், ”செத்தோம்டா” என்று நினைத்து வாகனத்தை வலது புறமாக சாலையை விட்டு நகர்த்தினான். வாகனம் தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு மரங்களிடையே சென்று ஒரு பெரிய மரத்தின் அடிபாகத்தில் மோதியது, அதிலிருந்து தூக்கு வீசப்பட்டு ஒரு முட்புதரில் விழுந்தான். பிழைத்தான். முட்புதர் அவனைக் காப்பாற்றியது. தனக்கு மறுபிறவி கிடைத்தது என்று நினைதுக் கொண்டான். பேருந்து நின்ற சத்தம் கேட்டது. அவனைக் காப்பாற்ற பேருந்திலிருந்து சில ஈர நெஞ்சங்கள் ஓடி வந்தன.
மேலே சொன்னது புனைவு தான். இருந்தாலும், இது போல் சிலருக்கு மறுபிறவி எடுத்த அனுபவங்கள் உண்டு. சென்னை நகரில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு தினம் தினம் மறுபிறவி என்று நீங்கள் கூறுவதை நான் புன்முறுவலுடன் செவி மடுக்கிறேன்.
இப்போது கேள்விக்கு வருவோம். ஒவ்வொருவருக்கும் மறுபிறவி உண்டா? சொர்கம், நரகம் உண்டா? ஆங்கிலத்தில் “Reincarnation”, “Life After Death” என்றெல்லாம் கூறுகிறார்கள். இதெல்லாம் உண்மையா?
என்னுடைய முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த உயிர் பற்றிய கேள்வியின் தொடர்ச்சி தான் இந்த மறுபிறப்பு பற்றியது.
இங்கே பின் வரும் திருக்குறளின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டால் மறுபிறப்பு பற்றி தெய்வப்புலவர் கூறியது நமக்குப் புரியவரும்.
குறள்
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
பரிமேலழகர் உரை
சாக்காடு உறங்குவது போலும் – ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும். பிறப்பு உறங்கி விழிப்பது போலும் – அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும்.
குறள்
பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.
பரிமேலழகர் உரை
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் – இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்;
சேராதார் நீந்தார் – அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்.
இங்கே இன்னும் சில திராவிடர்கள் எழுதிய உரையைக் காட்டி உங்களை மேலும் குழப்ப விரும்பவில்லை.
“ஆன்மா கூடுவிட்டு கூடு பாயும்”
“உடலுக்குத்தான் அழிவு உண்டு, ஆன்மாவிற்கு அல்ல”
”ஆன்மா (அ) ஆத்மாவில் இரண்டு வகை
1. ஜீவாத்மா,
2. பரமாத்மா”
”உயிர்களான ஜீவாத்மா ஒவ்வொன்றும், பரமாத்மாவின் அங்கங்களே.”
”ஜீவாத்மா, பரமாத்மாவை அடையும் வரை பிறவிகள் எடுத்துக் கொண்டே இருக்கும்.”
இது போன்ற வாசகங்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு ஒன்று மட்டும் புரியவேயில்லை. ஆத்மா ஏன் ஒரு உடலை விட்டு அடுத்த உடலுக்குத் தாவ வேண்டும்? அது ஏன் கடவுள் (அ) பரமாத்மாவிலிருந்து பிரிந்தது? ஆத்மாவிற்கு அழிவில்லை என்றால் உலகில் இன்னும் எத்தனை கோடி ஆத்மாக்கள் உடலைத் தேடி திரிந்து கொண்டிருக்கின்றன.
“Big Bang Theory” யின் படி வெடித்து உண்டான இந்த பூமி, முதலில் எரிந்து கொண்டிருந்தது. குளிர்ந்த பின்னர் தோன்றிய முதல் உயிரினதிற்கான ஆன்மா எங்கிருந்து வந்தது. வேறொரு அண்டத்திலிருந்தா?
அறிவியல் மூலமாக நாம் விடை தேடினால் நமக்கு விடை கிடைக்க இன்னும் சில கோடி ஆண்டுகள் ஆகலாம். அப்போது மனிதனை விட பன்மடங்கு பரிணாம வளர்ச்சியடைந்த ஒரு உயிரினம் விடை தேடிக் கொண்டிருக்கும். ஒரு சிறிய பல்லியினால் மின்சாரத்தையும் அதனால் விளக்கு எரிகிறது என்பதையும் அதற்குத் தேவையான இரை அந்த ஒளியினால் தான் அதன் கண்ணுக்குத் தெரிகிறது என்பதையும் அறிய முடியாது. அது போல் தான் நம் அறிவும், விஞ்ஞானமும். நம் விஞ்ஞான ஆராய்ச்சியின் படி, “பிக் பேங்க் தியரி”னால் இந்த அண்டம் உருவானது என்பதைக் கண்டுபிடிக்கலாம், ஆனால் அந்த “பிக் பேங்க்” ஏன் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்று எளிதாக சொல்லிவிட முடியாது.
இன்னும் சில வாசகங்களைக் கேள்விப்பட்டேன்.
“நாம் செய்யும் பாவ புண்ணியத்திற்கேற்ப நமது அடுத்த பிறவியில் நம் பிறப்பு அமையும்”.
இது எவ்வளவு பெரிய அபாண்டம். உதாரணத்திற்கு இப்பிறவியில் ஊனமுற்றோர் மன்னிக்கவும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் முந்தைய பிறவியில் பெரிய பாவங்கள் செய்தாவர்களா? அப்படி பாவம் செய்திருந்தால் அந்த பிறவியிலேயே தண்டனை கிடைக்கவில்லையா?
இன்னும் சில கேள்விகள் இருந்தன, அது சொர்கம், நரகம் பற்றியது. மனிதன் இறந்த பிறகு அவனது பாவ புண்ணியங்களுக்கேற்ப அவன் முறையே நரகம், சொர்கத்திற்கு செல்வான். நரகத்தில் எமன் இருப்பான். செய்த பாவத்திற்கேற்ப தண்டனை கொடுப்பான். சொர்கத்தில் இந்திரன் இருப்பதினால் செய்த புண்ணியத்தினால் அங்கே நன்றாக வாழலாம். இது போன்ற கட்டுக் கதைகளெல்லாம் கேட்டு ஒரு வித பயத்திலேயே அறியாப் பருவம் கழிந்தது. கட்டுக் கதைகளெல்லாம் கட்டவிழ்ந்து போனது பின்னாளில்.
”இருக்கர பிறவிலே ஒன்னும் பண்ண முடியல இதுல அடுத்த பிறவியாவது மண்ணாவது” என்று நீங்கள் குறு குறு வென்று பார்ப்பது தெரிகிறது. மேலும் சில சுவரஸ்யமான கேள்விகளுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.
பி.கு: முந்தைய பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கு நண்பர்கள் சிலர் பதில் எழுதி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர். அனைவருக்கும் நன்றி. ஒரு சிலர், கேள்விகளுக்கு பதிலையும் பதிவில் போடும்படி கேட்டிருந்தனர்.
”சாரி எனக்கு கேள்வி கேக்க மட்டும் தான் தெரியும், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்கிரது எனக்கு மட்டும் தான் தெரியும்”.
கேள்விகள் தொடரும் . . .
அது ஒரு அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப் பாதை. அவன் அவ்வழியே தினமும் தன் இரு சக்கர வாகனத்தில் அடுத்த ஊருக்கு சென்று தன் மளிகை கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவது வழக்கம். என்றும் தன் வண்டியை மெதுவாக ஓட்டிச்சென்று தான் வருவான். இன்று அவன் மனதிற்கு என்ன தோன்றியதோ, புறப்பட்ட சில நிமிடங்களில் வண்டியின் வேகத்தைக் கூட்டிக் கொண்டே சென்றான். வழியில் எது வந்தாலும் வேகத்தைக் குறைக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, எதிரே ஒரு சிறிய திருப்பம் வந்தது, ஒரு பேருந்து வரும் சத்தமும் வந்தது. பேருந்து வருவது தெரிந்திருந்தும் வேகத்தைக் குறைக்காமல் சாலையின் இடது புறமாகவே செல்லலாம் என்று நினைத்துத் திரும்பும் போது இடது பாதையில் சில எருமைகள் சாலையைக் கடக்க முற்பட்டன. சாலையின் இடது புறம் எருமைகளும் வலது புறம் பேருந்தும் தெரிந்தன. சாலையின் இருமருங்கிலும் அடர்ந்த வனம். அந்த ஒரு நொடியில் அவனுக்கு அந்த எருமைகளின் மீது எமன் அமர்ந்திருக்கிறானோ என்றே எண்ணத்தோன்றியது. என்ன செய்வதென்று தெரியாமல், ”செத்தோம்டா” என்று நினைத்து வாகனத்தை வலது புறமாக சாலையை விட்டு நகர்த்தினான். வாகனம் தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு மரங்களிடையே சென்று ஒரு பெரிய மரத்தின் அடிபாகத்தில் மோதியது, அதிலிருந்து தூக்கு வீசப்பட்டு ஒரு முட்புதரில் விழுந்தான். பிழைத்தான். முட்புதர் அவனைக் காப்பாற்றியது. தனக்கு மறுபிறவி கிடைத்தது என்று நினைதுக் கொண்டான். பேருந்து நின்ற சத்தம் கேட்டது. அவனைக் காப்பாற்ற பேருந்திலிருந்து சில ஈர நெஞ்சங்கள் ஓடி வந்தன.
மேலே சொன்னது புனைவு தான். இருந்தாலும், இது போல் சிலருக்கு மறுபிறவி எடுத்த அனுபவங்கள் உண்டு. சென்னை நகரில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு தினம் தினம் மறுபிறவி என்று நீங்கள் கூறுவதை நான் புன்முறுவலுடன் செவி மடுக்கிறேன்.
இப்போது கேள்விக்கு வருவோம். ஒவ்வொருவருக்கும் மறுபிறவி உண்டா? சொர்கம், நரகம் உண்டா? ஆங்கிலத்தில் “Reincarnation”, “Life After Death” என்றெல்லாம் கூறுகிறார்கள். இதெல்லாம் உண்மையா?
என்னுடைய முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த உயிர் பற்றிய கேள்வியின் தொடர்ச்சி தான் இந்த மறுபிறப்பு பற்றியது.
இங்கே பின் வரும் திருக்குறளின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டால் மறுபிறப்பு பற்றி தெய்வப்புலவர் கூறியது நமக்குப் புரியவரும்.
குறள்
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
பரிமேலழகர் உரை
சாக்காடு உறங்குவது போலும் – ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும். பிறப்பு உறங்கி விழிப்பது போலும் – அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும்.
குறள்
பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.
பரிமேலழகர் உரை
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் – இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்;
சேராதார் நீந்தார் – அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்.
இங்கே இன்னும் சில திராவிடர்கள் எழுதிய உரையைக் காட்டி உங்களை மேலும் குழப்ப விரும்பவில்லை.
“ஆன்மா கூடுவிட்டு கூடு பாயும்”
“உடலுக்குத்தான் அழிவு உண்டு, ஆன்மாவிற்கு அல்ல”
”ஆன்மா (அ) ஆத்மாவில் இரண்டு வகை
1. ஜீவாத்மா,
2. பரமாத்மா”
”உயிர்களான ஜீவாத்மா ஒவ்வொன்றும், பரமாத்மாவின் அங்கங்களே.”
”ஜீவாத்மா, பரமாத்மாவை அடையும் வரை பிறவிகள் எடுத்துக் கொண்டே இருக்கும்.”
இது போன்ற வாசகங்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு ஒன்று மட்டும் புரியவேயில்லை. ஆத்மா ஏன் ஒரு உடலை விட்டு அடுத்த உடலுக்குத் தாவ வேண்டும்? அது ஏன் கடவுள் (அ) பரமாத்மாவிலிருந்து பிரிந்தது? ஆத்மாவிற்கு அழிவில்லை என்றால் உலகில் இன்னும் எத்தனை கோடி ஆத்மாக்கள் உடலைத் தேடி திரிந்து கொண்டிருக்கின்றன.
“Big Bang Theory” யின் படி வெடித்து உண்டான இந்த பூமி, முதலில் எரிந்து கொண்டிருந்தது. குளிர்ந்த பின்னர் தோன்றிய முதல் உயிரினதிற்கான ஆன்மா எங்கிருந்து வந்தது. வேறொரு அண்டத்திலிருந்தா?
அறிவியல் மூலமாக நாம் விடை தேடினால் நமக்கு விடை கிடைக்க இன்னும் சில கோடி ஆண்டுகள் ஆகலாம். அப்போது மனிதனை விட பன்மடங்கு பரிணாம வளர்ச்சியடைந்த ஒரு உயிரினம் விடை தேடிக் கொண்டிருக்கும். ஒரு சிறிய பல்லியினால் மின்சாரத்தையும் அதனால் விளக்கு எரிகிறது என்பதையும் அதற்குத் தேவையான இரை அந்த ஒளியினால் தான் அதன் கண்ணுக்குத் தெரிகிறது என்பதையும் அறிய முடியாது. அது போல் தான் நம் அறிவும், விஞ்ஞானமும். நம் விஞ்ஞான ஆராய்ச்சியின் படி, “பிக் பேங்க் தியரி”னால் இந்த அண்டம் உருவானது என்பதைக் கண்டுபிடிக்கலாம், ஆனால் அந்த “பிக் பேங்க்” ஏன் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்று எளிதாக சொல்லிவிட முடியாது.
இன்னும் சில வாசகங்களைக் கேள்விப்பட்டேன்.
“நாம் செய்யும் பாவ புண்ணியத்திற்கேற்ப நமது அடுத்த பிறவியில் நம் பிறப்பு அமையும்”.
இது எவ்வளவு பெரிய அபாண்டம். உதாரணத்திற்கு இப்பிறவியில் ஊனமுற்றோர் மன்னிக்கவும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் முந்தைய பிறவியில் பெரிய பாவங்கள் செய்தாவர்களா? அப்படி பாவம் செய்திருந்தால் அந்த பிறவியிலேயே தண்டனை கிடைக்கவில்லையா?
இன்னும் சில கேள்விகள் இருந்தன, அது சொர்கம், நரகம் பற்றியது. மனிதன் இறந்த பிறகு அவனது பாவ புண்ணியங்களுக்கேற்ப அவன் முறையே நரகம், சொர்கத்திற்கு செல்வான். நரகத்தில் எமன் இருப்பான். செய்த பாவத்திற்கேற்ப தண்டனை கொடுப்பான். சொர்கத்தில் இந்திரன் இருப்பதினால் செய்த புண்ணியத்தினால் அங்கே நன்றாக வாழலாம். இது போன்ற கட்டுக் கதைகளெல்லாம் கேட்டு ஒரு வித பயத்திலேயே அறியாப் பருவம் கழிந்தது. கட்டுக் கதைகளெல்லாம் கட்டவிழ்ந்து போனது பின்னாளில்.
”இருக்கர பிறவிலே ஒன்னும் பண்ண முடியல இதுல அடுத்த பிறவியாவது மண்ணாவது” என்று நீங்கள் குறு குறு வென்று பார்ப்பது தெரிகிறது. மேலும் சில சுவரஸ்யமான கேள்விகளுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.
பி.கு: முந்தைய பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கு நண்பர்கள் சிலர் பதில் எழுதி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர். அனைவருக்கும் நன்றி. ஒரு சிலர், கேள்விகளுக்கு பதிலையும் பதிவில் போடும்படி கேட்டிருந்தனர்.
”சாரி எனக்கு கேள்வி கேக்க மட்டும் தான் தெரியும், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்கிரது எனக்கு மட்டும் தான் தெரியும்”.
கேள்விகள் தொடரும் . . .
Subscribe to:
Posts (Atom)